கொரோனா நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் 27,553 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று!
Corona Updates In India 02 01 2022
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 27,553 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 284 பேர் இந்தியாவில் பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது 4,81,770 ஆக உயர்ந்து இருக்கிறது.
இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் தேசத்தில் 9,249 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி இருக்கின்றனர். தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 150 கோடியை நெருங்கி கொண்டு இருக்கிறது. இந்தியாவில் 63.6 சதவிகிதம் பேர் குறைந்தபட்சம் ஒரு தவணையாவது தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர்.
“ மீண்டும் அதிகரிக்கும் தொற்றின் எண்ணிக்கை, இன்னொரு பக்கம் அதிகரிக்கும் புதிய தொற்றின் வகை என்று தேசத்தில் அசாதாரண சூழல் நிலவி வருவதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர் “