கொரோனா நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் 33,750 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று!

Corona Updates In India 03 01 2022

Corona Updates In India 03 01 2022

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 33,750 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 123 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 4,81,893 ஆக உயர்ந்து இருக்கிறது.

இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் 10,846 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி இருக்கின்றனர். தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 150 கோடியை நெருங்கி கொண்டு இருக்கிறது. இந்தியாவில் 63.5 சதவிகிதம் பேர் குறைந்தபட்சம் ஒரு தவணையாவது தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர்.

“ நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொற்றின் மூலம், இந்தியாவில் மூன்றாவது அலை எழுந்து விட்டதோ என்னும் பயம் தேசத்தில் தொற்றி இருக்கிறது “

About Author