கொரோனா நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் 37,379 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று!
Corona Updates In India 04 01 2022
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,379 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தொற்றுக்கு 124 பேர் பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 4,82,017 ஆக உயர்ந்து இருக்கிறது.
இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 11,007 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி இருக்கின்றனர். தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 150 கோடி என்ற மைல் கல்லை நெருங்கி கொண்டு இருக்கிறது. மீட்பு விகிதமும் தேசத்தில் 98.3 சதவிகிதமாக இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது.
“ திடீரென்று உயரும் தொற்றுகளின் வாயிலாக தேசத்தில் மூன்றாவது அலை நெருங்கி விட்டதாக ஒரு சில மருத்துவ வல்லுநர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் “