கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 5,921 புதிய தொற்றுகள் பதிவு’
Corona Updates In India 05 03 2022
இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 5,921 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 5,921 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 289 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 5,14,878 ஆக உயர்ந்து இருக்கிறது.
“ மருத்துவ ஆய்வாளர்கள் சொல்வது என்னவென்றால், வெகுவிரைவில் அதாவது ஜூன் – ஜூலை மாதத்தில் நான்காவது அலை இந்தியாவில் வரக்கூடும் என எச்சரித்து இருக்கின்றனர் “