கொரோனா நிலவரம் | தேசத்தில் ஒரு லட்சத்தை நெருங்கியது ஒரு நாள் கொரோனா பாதிப்பு!
Corona Updates In India 06 01 2022
இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 90,928 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்றைய தினத்தில் மட்டும் 325 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 4,82,876 ஆக உயர்ந்து இருக்கிறது.
இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் 19,206 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி இருக்கின்றனர். தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 150 கோடியை நெருங்கி இருக்கிறது. தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 2.85 லட்சமாக உயர்ந்து இருக்கிறது. மீட்பு விகிதமும் சற்றே குறைந்து 97.81 சதவிகிதமாக இருக்கிறது.
“ மீண்டும் தினசரி பாதிப்பு பன்மடங்காக உயர்ந்து வருவதால் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் “