கொரோனா நிலவரம் | ‘கடந்த 24 மணி நேரத்தில் 1,41,986 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று’
Corona Updates In India 08 01 2022
கடந்த 24 மணி நேரத்தில் 1,41,986 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,41,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தொற்றுக்கு 285 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 4,83,178 ஆக உயர்ந்து இருக்கிறது.
“ தற்போது ஒன்றரை லட்சத்தை நெருங்கி இருக்கும் தினசரி பாதிப்பு, ஜனவரி இறுதிக்கும் பத்து லட்சத்தை நெருங்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர் “