கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 3,993 புதிய தொற்றுகள் பதிவு’
Corona Updates In India 08 03 2022
இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 3,993 புதிய தொற்றுகல் உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 3,993 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் கொரோனா தொற்றுக்கு 108 பேர் பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,15,210 ஆக உயர்ந்து இருக்கிறது.
“ ஒட்டு மொத்த தேசத்தின் மீட்பு விகிதம் 98.68 ஆக உயர்ந்து இருக்கிறது. தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 180 கோடியை தொட இருக்கிறது “