கொரோனா நிலவரம் | ‘கடந்த 24 மணி நேரத்தில் 1,59,632 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று’

Corona Updates In India 09 01 2022

Corona Updates In India 09 01 2022

இந்தியாவில் ஒரே நாளில் 1,59,632 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,59,632 பேருக்கு இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 327 பேர் தேசத்தில் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது 4,83,790 ஆக உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

“ பாதிப்பு விகிதம் அதிகரித்து இருந்தாலும் இறப்பு விகிதத்தில் பெரிதாய் எந்த மாற்றமும் இல்லை, இந்த கொரோனா கடைசிவரை நம்முடனே பயணிக்கும் என்றும் மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் “

About Author