கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 4,575 புதிய தொற்றுகள் பதிவு’
Corona Updates In India 09 03 2022
இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 4,575 பேருக்கு புதியதாக கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 4,575 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 145 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை 5,15,355 ஆக உயர்ந்து இருக்கிறது.
” நேற்று ஒரே நாளில் 7,416 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி இருக்கின்றனர். தேசத்தில் மீட்பு விகிதம் 98.68 சதவிகிதமாக உயர்ந்து இருக்கிறது “