கொரோனோ நிலவரம் | இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,992 பேருக்கு புதியதாக தொற்று!
Corona Updates In India 11 12 2021
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7,992 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 393 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை இந்தியாவில் 4,75,128 ஆக உயர்ந்து இருக்கிறது.
மேலும் இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 9,265 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 132 கோடியைக் கடந்து இருக்கிறது. இது போக ஒமிக்ரான் தொற்று எண்ணிக்கையும் இந்தியாவில் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்றைய தினம் வரை இந்தியாவில் 26 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
“ தற்போது ஒமிக்ரான் பெருகிவரும் இந்த சூழலில், இது இன்னமும் பெருக்கெடுத்து 10,000 என்ற நிலையை ஜனவரிக்குள் அடையும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர் “