கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 474 புதிய தொற்றுகள் பதிவு’
Corona Updates In India 15 11 2022
இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 474 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 474 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் கொரோனோவிற்கு இந்தியாவில் ஒருவர் மட்டும் பலியாகி இருக்கிறார். தற்போது வரை தேசத்தில் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை என்பது 5,30,533 ஆக உயர்ந்து இருக்கிறது.
“ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 12,308 ஆக குறைந்து இருக்கிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் தேசத்தில் 800 பேர் தொற்றில் இருந்து பூரண குணம் அடைந்து இருக்கின்றனர். “