கொரோனோ நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் 6,984 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!
Corona Updates In India 15 12 2021
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,984 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 247 பேருக்கு தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கையானது 4,76,135 ஆக உயர்ந்து இருக்கிறது.
இது போல நேற்றைய தினத்தில் மட்டும் 8,168 பேர் இந்தியாவில் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி இருக்கின்றனர். தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 135 கோடி என்ற இலக்கை நெருங்கி இருக்கிறது. இந்தியாவில் 63 சதவிகிதத்திற்கும் மேலோனோர் குறைந்த பட்சம் ஒரு தவணையாவது தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர்.
“ நாள்பட்ட தொற்றுகள் உருமாறி உருமாறி அடுத்தடுத்த தொற்றுக்கு வழி வகுப்பதால் கண்டறியப்படாத தொற்றுகளை கண்டறிய வேண்டிய சூழலும் உருவாகி வருகிறது. இத்தகைய நிலையே ஒமிக்ரான் உருவாவதற்கும் காரணமாக கருதப்படுகிறது “