கொரோனா நிலவரம் | ‘கடந்த 24 மணி நேரத்தில் 2.58 லட்சம் கொரோனா தொற்றுகள் பதிவு’
Corona Updates In India 17 01 2022
இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 2.58 லட்சம் கொரோனா தொற்றுகள் பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 2,58,089 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தேசத்தில் கொரோனா தொற்றுக்கு 385 பேர் பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 4,86,451 ஆக உயர்ந்து இருக்கிறது.
“ ஒமிக்ரானின் வேகம் குழந்தைகளையும், சிறார்களையும் அதிகம் பாதிக்கும் நிலையில் பெரும்பாலான மாநிலங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது “