கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 30,757 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று’
Corona Updates In India 17 02 2022
இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 30,757 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 30,757 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 541 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,10,413 ஆக உயர்ந்து இருக்கிறது.
“ தேசத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 3,32,918 ஆக குறைந்து இருக்கிறது “