கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 2,539 புதிய தொற்றுகள் பதிவு’
Corona Updates In India 17 03 2022
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 2,539 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 2,539 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 60 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை 5,16,132 ஆக உயர்ந்து இருக்கிறது.
“ இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் 4,491 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி இருக்கின்றனர். தேசத்தில் மீட்பு விகிதம் 99 சதவிகிதத்தை நெருங்கி இருக்கிறது “