கொரோனா நிலவரம் | ‘கடந்த 24 மணி நேரத்தில் தேசத்தில் 2.38 லட்சம் தொற்றுகள் பதிவு’
Corona Updates In India 18 01 2022
இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 2.38 லட்சம் தொற்றுகள் பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில், 2,38,018 புதிய தொற்றுகள் பதிவாகி இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தேசத்தில் 310 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 4,86,761 ஆக உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
“ மூன்று லட்சத்தை நெருங்கி கொண்டு இருந்த தேசத்தின் கொரோனா பரவல் கடந்த இரண்டு நாட்களாக குறைந்த வண்ணம் இருக்கிறது. இன்னும் ஒரு வாரத்திற்குள் அதன் நிலை கட்டுக்குள் அடங்குமா இல்லை கட்டுக்கடங்காமல் செல்லுமா என்பது தெரியும் “