கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 25,920 புதிய தொற்றுகள் பதிவு’
Corona Updates In India 18 02 2022
இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 25,920 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 25,920 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 492 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 5,10,905 ஆக உயர்ந்து இருக்கிறது.
“ மூன்று லட்சம் வரை சென்ற தினசரி கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து தற்போது 25,000-த்தில் நிற்கிறது. தடுப்பூசி உபயோகம் அதிகமாகி இருப்பதால், தொற்றினால் ஏற்படும் இறப்புகளின் விகிதம் வெகுவாக குறைந்து இருக்கிறது “