கொரோனா நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் 7,145 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!
Corona Updates In India 18 12 2021
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,145 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 289 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 4,77,158 ஆக உயர்ந்து இருக்கிறது.
இது போக நேற்றைய தினத்தில் மட்டும் 8,706 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி இருக்கின்றனர். தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 136 கோடியைக் கடந்து இருக்கிறது. வளர்ந்த நாடுகளை விட தடுப்பூசி செயல்பாடுகளில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருவதாக உலக சுகாதார அமைப்பினரே நம் தேசத்தை பாராட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.
“ ஒமிக்ரானை எதிர் கொள்ள உலக நாடுகள் பூஸ்டர் டோசை அனுமதித்து வருகின்றன. வெகு விரைவில் பூஸ்டர் டோஸ் இந்தியாவிலும் அனுமதி பெற்று நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கருத்து தெரிவித்து இருக்கிறது “