கொரோனா நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் 7,081 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று!
Corona Updates In India 19 12 2021
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,081 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 264 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது இந்தியாவில் 4,77,422 ஆக உயர்ந்து இருக்கிறது.
இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் 7,469 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி இருக்கின்றனர். மீட்பு விகிதம் இந்தியாவில் 98.38 சதவிகிதமாக இருக்கிறது. மேலும் தேசத்தில் தடுப்பூசி உபயோகம் 137 கோடியாக உயர்ந்து இருக்கிறது. நாட்டில் 82.6 கோடி பேர் குறைந்தபட்சம் முதல் தவணை தடுப்பூசியாவது எடுத்துக் கொண்டுள்ளனர்.
“ ஒரு பக்கம் டெல்டா அலையே ஓயாத போது, இந்தியாவில் தற்போது ஒமிக்ரான் விஸ்வரூபம் எடுத்து வருவது நாட்டில் அச்சத்தை விதைத்து வருகிறது “