கொரோனா நிலவரம் | ‘கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 13,405 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று’
Corona Updates In India 22 02 2022
இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 13,405 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 13,405 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 235 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை 5,12,344 ஆக உயர்ந்து இருக்கிறது.
“ தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1.81 லட்சமாக குறைந்து இருக்கிறது. நேற்று மட்டும் 34,226 பேர் தொற்றில் இருந்து குணமாகி இருக்கின்றனர் “