கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 1,581 புதிய தொற்றுகள் பதிவு’
Corona Updates In India 22 03 2022
இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 1,581 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 1,581 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய் சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. இது போக 33 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை 5,16,543 ஆக உயர்ந்து இருக்கிறது.
“ நேற்று ஒரு நாளில் மட்டும் தேசத்தில் 2,741 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி இருக்கின்றனர். மீட்பு விகிதமும் தேசத்தில் 98.79 சதவிகிதமாக உயர்ந்து இருக்கிறது “