கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 15,102 புதிய தொற்றுகள் பதிவு’
Corona Updates In India 23 02 2022
இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 15,102 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 15,102 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 278 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை 5,12,622 ஆக உயர்ந்து இருக்கிறது.
“ தேசத்தில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்த வண்ணம் இருக்கிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 31,377 பேர் தொற்றில் இருந்து குணமாகி இருக்கின்றனர் “