கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 13,166 புதிய தொற்றுகள் பதிவு’
Corona Updates In India 25 02 2022
இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 13,166 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 13,166 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 302 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,13,226 ஆக உயர்ந்து இருக்கிறது.
“ நேற்று ஒரு நாளில் மட்டும் 26,988 பேர் தேசத்தில் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி இருக்கின்றனர். தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 177 கோடியை தொட்டு இருக்கிறது “