கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 1,421 புதிய தொற்றுகள் பதிவு’
Corona Updates In India 27 03 2022
இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 1,421 புதிய கொரோனா தொற்றுகல் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 1,421 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தேசத்தில் 149 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,21,004 ஆக உயர்ந்து இருக்கிறது.
“ இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் தேசத்தில் 1,826 பேர் தொற்றில் இருந்து பூரண குணம் அடைந்து இருக்கின்றனர். தொற்றுக்கு ஒட்டு மொத்தமாக சிகிச்சை பெறுபவர்களின் விகிதம் 0.04 சதவிகிதமாக குறைந்து இருக்கிறது “