கொரோனோ நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் 8,309 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!
Corona Updates In India 29 11 2021
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,309 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப் பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 236 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை ஆனது 4,68,790 ஆக உயர்ந்து இருக்கிறது.
இது போக நேற்றைய தினத்தில் மட்டும் 9,905 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். இந்தியாவில் மீட்பு விகிதமும் 98.34 சதவிகிதமாக உயர்ந்து இருக்கிறது. தடுப்பூசி உபயோகத்தை பொறுத்தவரை இந்தியாவில் அது 122 கோடியை அடைந்து இருக்கிறது. இந்தியாவில் 100 பேருக்கு தலா 90.96 பேர் குறைந்தபட்சம் முதல் தவணை தடுப்பூசியாவது எடுத்துக் கொள்கின்றனர்.
“ என்ன தான் தடுப்பூசி கொண்டு பாதுகாப்பு அரண்கள் ஏற்படுத்தினாலும் கூட, புதிய வகை ஒமிக்ரான் வைரஸ்சுக்கு அது தாக்கு பிடிக்குமா என்பது கேள்விக்குறியே! “