கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 1,225 புதிய தொற்றுகள் பதிவு’
Corona Updates In India 31 03 2022
இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 1,225 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 1,225 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தேசத்தில் 28 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,21,129 ஆக உயர்ந்து இருக்கிறது.
“ இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் தேசத்தில் 1,594 பேர் தொற்றில் இருந்து பூரண குணம் அடைந்து இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த மீட்பு விகிதம் தேசத்தில் 98.73 சதவிகிதமாக உயர்ந்து இருக்கிறது “