கடந்த 24 மணிநேரத்தில் தேசத்தில் 13,186 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!
Corono Updates in India 12 10 2021
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,186 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்றைய தினத்தில் மட்டும் 177 பேர் இந்தியாவில் கொரோனோ தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை இந்தியாவில் 4,50,991 ஆக உயர்ந்து இருக்கிறது.
இது போக இந்தியாவில் நேற்றைய தினத்தில் மட்டும் 26,572 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 96 கோடியைக் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்தியாவில் 100 பேருக்கு தலா 71.64 பேர் தடுப்பூசி எடுத்துக் கொள்கின்றனர். நாளுக்கு நாள் தானாக முன் வந்து தடுப்பூசி எடுத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கையும் தேசத்தில் உயர்ந்து கொண்டே வருகிறது.
” தடுப்பூசி செயல்பாடுகளை முன் நிறுத்தினால் மட்டுமே இந்த தொற்றில் இருந்து நாம் முழுவதும் விடுபட முடியும் என்பதை தேசம் ஒட்டு மொத்தமாக உணர்ந்து கொண்டு இருக்கிறது. இன்னும் இந்த விகிதம் சீக்கிரத்தில் 100 சதவிகிதம் அடையும் என நம்பிக்கை கொள்வோம் “