கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 16,021 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!
Corono Updates In India 13 10 2021
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 16,021 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்றைய தினத்தில் மட்டும் இந்தியாவில் 229 பேர் தொற்றிற்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை ஆனது 4,51,220 ஆக உயர்ந்து இருக்கிறது.
இது போக தேசத்தில் நேற்று ஒரே நாளில் 22,850 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தடுப்பூசி உபயோகமும் இந்தியாவில் 96 கோடியை எட்டி இருக்கிறது. இந்த வார இறுதிக்குள் இது 100 கோடியை எட்டும் என எதிர் பார்க்கப்படுகிறது. கணக்கீடு மற்றும் புள்ளி விவரங்களின் படி இந்தியாவில் 100 பேருக்கு தலா 72 பேர் தடுப்பூசி எடுத்துக் கொள்ள முன் வருகின்றனர்.
“ குறைந்து வரும் பாதிப்பு, பெருகி வரும் மீட்பு விகிதம், தடுப்பூசி செயல்பாடுகள் அதிகரிப்பு, குறைந்து வரும் இறப்பின் விகிதம் இந்த செயல்பாடுகளையெல்லாம் இன்னும் மெருகேற்றினால் மூன்றாவது அலைக்கான சாத்தியக்கூறுகளை முற்றிலும் அழித்து விடலாம் “
About Author
Auto Amazon Links: No products found.