இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,180 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!
Corono Updates In India 14 10 2021
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 19,180 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் இந்தியாவில் 249 பேர், கொரோனோ தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலியானது 4,51,469 ஆக உயர்ந்து இருக்கிறது.
இது போக நேற்றைய தினத்தில் மட்டும் தேசத்தில் 19,796 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தடுப்பூசி உபயோகமும் இந்தியாவில் 97 கோடியைக் கடந்து இருக்கிறது. நாட்டில் 100 பேருக்கு தலா 72.12 பேர் தடுப்பூசி எடுத்துக் கொள்ளும் அளவுக்கு, தடுப்பூசி உபயோகம் வெகுவாக தேசத்தில் உயர்ந்து இருக்கிறது.
“ குழந்தைகளுக்கான தடுப்பூசியும் பயன்பாட்டுக்கு வந்து விட்டால் கொரோனோ என்னும் சூழலை திறம்பட எதிர்கொள்ளும் நோக்கு தேசத்தில் 100 சதவிகிதத்தை எட்டி விடும் என்பதில் ஐயமில்லை “