கடந்த 24 மணி நேரத்தில் 16,003 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!
Corono Updates In India 16 10 2021
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,003 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்றைய தினத்தில் மட்டும் இந்தியாவில் 163 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை இந்தியாவில் 4,52,010 ஆக உயர்ந்துள்ளது.
இது போக நேற்றைய தினத்தில் மட்டும் இந்தியாவில் 17,868 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 98 கோடியை தொட்டு இருக்கிறது. தேசத்தில் 100 பேருக்கு தலா 73 பேர் தானாக முன் வந்து தடுப்பூசி எடுத்துக் கொள்கின்றனர்.
“ இந்த வார இறுதிக்குள் தடுப்பூசி உபயோகம் தேசத்தினுள் 100 கோடியை அடைந்து விடும். தடுப்பூசி செயல்பாடுகள் அதிகரிக்கும் போது தான், நாட்டில் தொற்றினால் ஏற்படும் இழப்புகளை குறைக்க முடியும். ஆதலால் தடுப்பூசிக்கு தகுதியானவர்கள் உங்களுக்காக தடுப்பூசியை நீங்களே முன் வந்து எடுத்துக்கொள்ளுங்கள் “