கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 14,073 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!
Corono Updates In India 17 10 2021
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,073 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்றைய தினத்தில் மட்டும் இந்தியாவில் 146 பேர் கொரோனோ தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை 4,52,156 ஆக உயர்ந்துள்ளது.
இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 19,785 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தடுப்பூசி உபயோகமும் இந்தியாவில் 98 கோடியை எட்டி இருக்கிறது. வெகுவிரைவில் இந்த உபயோகம் 100 கோடியை எட்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்திலும் தடுப்பூசி உபயோகம் 5.27 கோடி என்ற நிலையை அடைந்து இருக்கிறது.
“ மூன்றாவது அலை குறித்த அறிக்கைகள் அவ்வப்போது பயமுறுத்தி வந்தாலும், அரசின் செயல்பாடுகள் அதை எதிர் கொள்ளும் வகையில் திறம்படவே இருக்கிறது “