இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,338 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!
Corono Updates In India 19 10 2021
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 12,338 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்றைய தினத்தில் மட்டும் இந்தியாவில் 164 பேர் கொரோனோ தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலியானது தேசத்தில் 4,52,485 ஆக உயர்ந்து இருக்கிறது.
இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 19,454 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தடுப்பூசி உபயோகமும் இந்தியாவில் 98 கோடியைக் கடந்து இருக்கிறது. வெகு விரைவில் இந்த எண்ணிக்கை 100 கோடியைக் கடந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீட்பு விகிதமும் இந்தியாவில் 98 சதவிகிதமாக உயர்ந்து இருக்கிறது.
“ உயர்ந்து வரும் மீட்பு விகிதம், அதிகரித்து வரும் தடுப்பூசி உபயோகம் என தேசம் கொரோனோவிற்கு எதிராக சரியான பாதையில் சென்று கொண்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதை இன்னமும் மென்மேலும் தொடர்வோம். கொரோனோவை நாட்டில் இருந்து அகற்றிடுவோம் “