கொரோனோ நிலவரம் | இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,508 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!
Corono Updates In India 27 10 2021
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 13,508 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப் பட்டு இருக்கிறது. மேலும் நேற்றைய தினத்தில் மட்டும் தொற்றுக்கு 584 பேர் பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை 4,55,684 ஆக உயர்ந்து இருக்கிறது.
இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் தேசத்தில் 14,049 பேர் தொற்றில் இருந்து குணமாகி இருக்கின்றனர். இந்தியாவில் மீட்பு விகிதம் 98.19 சதவிகிதமாக உயர்ந்து இருக்கிறது. தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 103 கோடியை கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்தியாவில் 100 பேருக்கு தலா 77 பேர் தானாகவே முன் வந்து தடுப்பூசி எடுத்துக் கொள்கின்றனர்.
“ பரவலின் தன்மை வெகுவாக குறைந்து வரும் இந்த சூழலை அப்படியே தக்க வைத்துக் கொண்டாலே மூன்றாவது அலையை நாம் பெரும்பாலும் தவிர்த்து விடலாம் “