கொரோனோ நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 12,830 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In India 31 10 2021

Corono Updates In India 31 10 2021

இந்தியாவில் கடந்த 24 மனி நேரத்தில் 12,830 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 446 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலியானது தேசத்தில் 4,58,186 ஆக உயர்ந்து இருக்கிறது.

இது போக நேற்றைய தினத்தில் மட்டும் இந்தியாவில் 14,667 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தடுப்பூசி உபயோகமும் இந்தியாவில் 106 கோடியை தொட்டு இருக்கிறது. புதிய தொற்றுவ் வெகுவாக குறைந்து இருக்கிறது. மீட்பு விகிதமும் தேசத்தில் 98.82 சதவிகிதமாக உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

“ பரவுகின்ற புதிய வகை கொரோனோவுக்கு பயந்து பின்வாங்குவதைக் காட்டிலும், அதை எதிர்க்கும் கண்ணோடு தடுப்பூசி எடுத்துக் கொள்ள முன் வருவது தான் இங்கு அவசியமாகிறது “

About Author