இரண்டாயிரம் ரூபாயை மாற்றுவதற்கான காலக்கெடு நீட்டிப்பு!

இரண்டாயிரம் ரூபாயை மாற்றுவதற்கான காலக்கெடுவை மேலும் நீட்டித்து இருக்கிறது ரிசர்வ் வங்கி.

கடந்த மே 10 அன்று புழக்கத்தில் இருக்கும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி திரும்ப பெறுவதாக அறிவித்து இருந்தது. அதற்கான காலக்கெடு செப்டம்பர் 30 என அறிவித்து இருந்த நிலையில், தற்போது அக்டோபர் 7 வரை நோட்டுக்களை மாற்றுவதற்கான காலக்கெடுவை RBI நீட்டித்து இருக்கிறது.

” தற்போதுவரை 93 சதவிகித நோட்டுக்கள் திரும்ப பெறப்பட்டு இருப்பதாகவும், அக்டோபர் 7-க்குள் 100 சதவிகிதம் திரும்ப பெறப்படும் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்து இருக்கிறது “

About Author