ஒமிக்ரான் நிலவரம் | ‘இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று 4,461 பேருக்கு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது’
Omicron Updates In India 11 01 2022
இந்தியாவில் தற்போது வரை 4,461 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.
தேசத்தில் அதிகபட்சமாக மஹாராஸ்டிராவில் 1,247 பேருக்கும், ராஜஸ்தானில் 645 பேருக்கும், டெல்லியில் 546 பேருக்கும், கர்நாடாகாவில் 479 பேருக்கும், கேரளாவில் 350 பேருக்கும் ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் ஒட்டு மொத்த ஒமிக்ரான் தொற்று 4,461 ஆக தேசத்தில் உயர்ந்து இருக்கிறது.
“ உலகம் முழுக்க பரவி வரும் தொற்றுகளில் பெரும்பாலான தொற்றுகள் ஒமிக்ரான் தொற்றுகளாகவே இருப்பதால் அது மேலும் உருமாறக்கூடும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர் “