இந்தியாவிற்கு சுற்றுலா வந்த ஸ்பானிஷ் பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட அவலம்!

இந்தியாவிற்கு கணவருடன் சுற்றுலா வந்த ஸ்பானிஷ் பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்தியாவிற்கு கணவருடன் சுற்றுலா வந்த ஸ்பானிஷ் பெண் ஒருவர், ஜார்க்கண்ட் மாநிலம் தும்காவில், 7 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு இருக்கும் அவலம் ஒன்று அரங்கேறி இருக்கிறது. சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அவரது கணவரையும் தாக்கிவிட்டு அவர்களிடம் இருந்த பணத்தையும் பறித்து சென்று இருக்கின்றனர். இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வரும் தும்கா காவல்துறை இதுவரை மூவரை கைது செய்து இருக்கிறது.

“ வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் இந்தியாவில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பது, இந்தியாவின் பாதுகாப்பை கேள்வி குறியாக்கி இருக்கிறது “

About Author