ஏர் இந்தியாவை அதிகாரப்பூர்வமாக கைப்பற்றியது டாடா நிறுவனம்!

ஏர் இந்தியா நிறுவனத்தை சட்டபூர்வமாகவும், அதிகாரப்பூர்வமாகவும் கைப்பற்றி இருக்கிறது டாடா நிறுவனம்.

தத்தளித்து வந்த ஏர் இந்தியா நிறுவனத்தை 18,000 கோடிக்கு, டாடா நிறுவனம் சில தினங்களுக்கு முன் வாங்கி இருந்தது. இந்த நிலையில் சட்டபூர்வ ஆவண பரிமாற்றம் நடைபெற்று வந்த நிலையில் இன்று மொத்தமாக எல்லாம் முடிந்து அதிகாரப்பூர்வமாக ஏர் இந்தியா, டாடா நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது.

“ இதன் மூலம் மீண்டும் ஏர் இந்தியா நிறுவனத்தை தன்வசப்படுத்தி இருக்கிறது டாடா நிறுவனத்தின் குழு “

About Author