ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களின் வீட்டில் நகைகள், பணம் கொள்ளை!

நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகள் மற்றும் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இயக்குநர் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களின் வீட்டில் 60 பவுன் நகைகள், வைரங்கள் மற்றும் லட்சத்தில் பணங்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வீட்டில் வேலை பார்ப்பவர்கள் கைவரிசை காட்டி இருக்கலாம் என சந்தேகித்து காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

“ வீட்டில் வேலை பார்ப்பவர்களுக்கு லாக்கர் எங்கிருப்பது என்றெல்லாம் தெரியும் என்பதால் அவர்கள் மீது சந்தேகிப்பதாக காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது “

About Author