’எந்த முட்டாள் பெட்ரோல், டீசல் வரியை ஏத்தினானோ அவனையே குறைக்க சொல்லுங்க’ – சந்திர சேகர ராவ்

Telangana CM Chandra Sekhar Rao

Telangana CM Chandra Sekhar Rao

பெட்ரோல், டீசல் நாளுக்கு நாள் விலை எகிறிக் கொண்டு இருக்கும் நிலையில் தெலுங்கானா முதல்வர் ஒரு காட்டமான கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

பெட்ரோல், டீசல் விலை தினசரி உயர்ந்து கொண்டே வரும் நிலையில், பிரதமர் மோடி அவர்கள் மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து இருந்தார். இது குறித்து தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கூறுகையில் ‘நாங்கள் வேட் வரியை ஒரு பைசா கூட அதிகரிக்கவில்லை, ஆகையால் எந்த முட்டாள் விலையை வரியை உயர்த்தினார்களோ அவர்களே குறைக்க வேண்டும்’ என காட்டமாக கருத்து தெரிவித்து இருக்கிறார்.

“ வர வர எல்லா பக்கமும் ஆளும் மத்திய அரசிற்கு அணை கட்டுகின்றனர். அதிலும் தென் மாநிலங்கள் கொஞ்சம் கூட கரிசனம் பார்ப்பதில்லை “

About Author