’ பொன்னியின் செல்வன் ‘- முழுவதும் படமாக்கப்பட்டது கார்த்தியின் பாகம்

Ponniyin Selvan Karthi Finished His Parts

Ponniyin Selvan Karthi Finished His Parts

’பொன்னியின் செல்வன்’ படத்தில் கார்த்தியின் பாகம் முழுமையாக படமாக்கப்பட்டு விட்டதாக நடிகர் கார்த்தி தனது ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

இயக்குநர் மணிரத்னம் அவர்களின் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லெட்சுமி, சரத்குமார், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயராம், விக்ரம் பிரபு மற்றும் பலர் நடிக்கும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் வந்தியந்தேவனாக நடிக்கும் நடிகர் கார்த்தி அவரின் பாகம் முழுமையாக படமாக்கப்பட்டு விட்டதாக அவர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படத்தின் வரிசையில் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படமும் இருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. மிகப்பெரிய பட்டாளங்கள் இருக்கும் படத்தில் மணிரத்னம் ஒவ்வொருவருக்கும் எப்படி ஸ்கீரின் ப்ரசன்சை கொடுத்திருப்பார் என்று நினைத்தால் ஒரு கணம் தலையே சுற்றுகிறது.

“ படித்த ஒரு களத்தை திரையில் காணும் போது எப்படி இருக்கும் என்பதை யூகிக்க முடியவில்லை, நிச்சயம் மணிரத்னம் அவர்கள் நம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வார் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. காத்திருப்போம் பொன்னியின் செல்வனுக்காக… “

About Author