ஐபிஎல் 2021 | பெங்களுரை எளிதாக வென்றது சென்னை அணி!

CSK Won Against RCB IPL 2021 35 th Match

CSK Won Against RCB IPL 2021 35 th Match

ஐபிஎல் 2021, 35 ஆவது போட்டியில் பெங்களுரை எளிதாக வென்று பாயின்ட் டேபிளில் மீண்டும் முதல் இடத்திற்கு வந்தது சென்னை அணி!

முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணியின் கோஹ்லி, படிக்கல் இருவரும் அரைசதத்தை அடித்திருந்தாலும் மீதி யாரும் பெரிதாய் ஜொலிக்காததால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதற்கு பின் ஆடிய சென்னை அணி 18.1 ஓவர்களில் நான்கு விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து எளிதாக இலக்கை துரத்திப்பிடித்தது.

இந்த வெற்றியின் மூலம் மீண்டும் பாயின்ட் டேபிளில் முதல் இடத்திற்கு அரியணை ஏறி இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். சென்னை சார்பில் பிராவோ நான்கு ஓவர்கள் வீசி 24 ரன்கள் மற்றுமே விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றினார். தாக்கூரும் படிக்கல், டிவில்லியர்ஸ் என்று இரண்டு முக்கியமான விக்கெட்டுக்களை சென்னை அணிக்காக கைப்பற்றிக் கொடுத்தார்.

கோலியும்,படிக்கல்லும் நின்று கொண்டிருக்கும் போது இது ஒரு பெரிய ஸ்கோர் மேட்ச் ஆகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆர்சிபி அணியின் மற்ற வீரர்கள் தொடர்ந்து சிஎஸ்கே பவுலர்களிடம் விக்கெட்டுகளை பறி கொடுத்ததால் இது ஒரு சாதாரண சேஸ் செய்ய கூடிய ஸ்கோராகவே கடைசியில் முடிந்தது.

“ குரு-சிஷ்யன் போட்டியில் கடைசியில் குருவே கடைசியில் வென்றிருக்கிறார். அணியை புள்ளி பட்டியலில் முதல் இடத்திலும் அரியணை ஏற்றி இருக்கிறார் தோனி, தொடர்ந்து பார்க்கலாம் இன்னும் இந்த புள்ளி பட்டியலில் என்னென்ன மாற்றங்கள் நடக்க இருக்கிறது என்று! “

About Author