களத்தில் ரோஹிட் ஷர்மாவை மரியாதைக் குறைவாக நடத்திய ஹர்திக்!

Hardik Pandya Disrespect Rohit On Field What Happened Idamporul

Hardik Pandya Disrespect Rohit On Field What Happened Idamporul

குஜராத் மற்றும் மும்பை இடையிலான போட்டியின் போது ஹர்திக் பாண்டியா, ரோஹிட் அவர்களை களத்தில் மரியாதைக் குறைவாக நடத்திய ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

கடந்த வருடம் குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா, மும்பை அணிக்கு திரும்ப வர வேண்டுமானால் கேப்டன் பதவியை தனக்கு கொடுக்க வேண்டும் என மும்பை நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கவே, மும்பை நிர்வாகமும் 5 கோப்பை வென்ற கேப்டன் என்றும் பாராமல் ரோஹிட் ஷர்மாவை அதிரடியாக நீக்கி விட்டு ஹர்திக்கை மும்பை அணிக்கு இழுத்து போட்டு அவருக்கு கேப்டன் பதவியும் கொடுத்தது.

இந்த நிலையில் நேற்று நடந்த மும்பை அணிக்கும் குஜராத் அணிக்கும் இடையிலான போட்டியின் போது, களத்தில் தற்போதைய மும்பை அணியின் கேப்டன் ஆன ஹர்திக் பாண்டியா அவர்கள், முன்னாள் கேப்டன் ரோஹிட் ஷர்மாவை சீனியர் வீரர் என்றும் பாராமல் மிகவும் மரியாதைக் குறைவாக நடத்தியதாக ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். இது போக சக வீரர்களிடமும் ஹர்திக் பாண்டியா ஓவராக Attitude காட்டுவதாக தெரிகிறது.

“ முதல் போட்டியில் தோற்று இருக்கும் மும்பை அணி, அடுத்தடுத்த போட்டிகளில் ஆவது வெல்ல வேண்டுமானால், சீனியர் வீரர்களுடனும், சக வீரர்களுடனும் ஹர்திக் நடந்து கொள்ளும் அணுகுமுறையை மாற்றியே ஆக வேண்டும் என்கின்றனர் ரசிகர்கள் “

About Author