இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் சதத்தை நெருங்கி கொண்டு இருக்கிறார் ரோஹிட் ஷர்மா.
முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 177 ரன்களுக்குள் முதல் நாளிலேயே அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து இருந்தது. அதற்கு பின் ஆடிய இந்திய அணியினர் இரண்டாம் நாள் உணவு இடைவேளைக்கு முன் மூன்று விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்து இருக்கின்றனர். ரோஹிட் 85(142) எடுத்து களத்தில் நிற்கிறார்.
“ ரோஹிட், விராட் காம்போ இன்னும் களத்தில் நிற்பதால் ஆஸ்திரேலிய அணிக்கு ஒரு நல்ல லீட் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம் “