IND vs IRE | 2nd T20 | ‘பயமுறுத்திய அயர்லாந்து, நூலிழையில் தப்பிய இந்திய அணி’

இந்தியா மற்றும் அயர்லாந்து இடையிலான கடைசி டி20 போட்டியில் நூலிழையில் தப்பித்து 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்தனர். ஒரு நல்ல ஸ்கோர் தான் எப்படியும் டிபென்ட் செய்து விடலாம் என்று நினைத்து இருந்த இந்திய அணிக்கு கேப்டன் பால்பிர்னியும் 60(37), ஸ்ட்ர்லிங்கும் 40(18) பயம் காட்டினர் இறுதியில் வெறும் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

“ எந்த நிலையிலும் அயர்லாந்து அணியை எளிதில் நினைத்து விட கூடாது போல, அவர்கள் அவ்வபோது பெரிய அணிகளை எளிதாக துவம்சம் செய்து விடுகிறார்கள். இது காலம் காலமாக அரங்கேறி வருகிறது “

About Author