IND vs WI | 5th T20 | ’88 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி’

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையிலான ஐந்தாவது டி20 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி இருக்கிறது.

முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 188 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்ரேயஸ் ஐயர் 64(40) ரன்கள் எடுத்தார். அதற்கு பின் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி இந்திய சுழலை தாக்கு பிடிக்க முடியாமல் சீரிய இடைவெளிகளில் விக்கெட்டுக்களை இழந்து 100 ரன்கள் மட்டுமே எடுத்து 88 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.

“ இந்த வெற்றியின் மூலம் 4-1 என்ர கனக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது. மூன்று ஓவர்கள் வீசி 15 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுக்களை கைப்பற்றிய அக்‌ஷர் படேல் ஆட்டநாயகனாக தேர்ந்து எடுக்கப்பட்டார் “

About Author