டெல்லி அணி வெற்றி, ஆனாலும் கொண்டாடி தீர்த்த சிஎஸ்கே ரசிகர்கள், காரணம் என்ன?

IPL 2024 Match No 13 Delhi Won But CSK Fan Celebration Gone Mad Why Fact Here Idamporul

IPL 2024 Match No 13 Delhi Won But CSK Fan Celebration Gone Mad Why Fact Here Idamporul

சென்னை மற்றும் டெல்லி அணி இடையிலான போட்டியில் சென்னை அணி தோற்ற போதும் கூட சிஎஸ்கே ரசிகர்கள் களத்தில் கொண்டாடி தீர்த்தனர்.

நேற்று நடந்த டெல்லி மற்றும் சென்னை அணி இடையிலான போட்டியில் முதலில் ஆடிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய சென்னை அணியின் துவக்க ஆட்டக்கார்ர்கள் ருதுராஜ், ரச்சின் சொற்ப ரன்களில் அவுட் ஆக ரஹானே 45 (30), டேரி மிட்சல் 34(26) கொஞ்சம் சிறப்பாக விளையாடி சேஸ்சை நிலை நிறுத்தி வைத்தனர்.

ஆனாலும் அதற்கு பின் களம் இறங்கிய துபே, ஜடேஜா டெல்லி அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் கொஞ்சம் திணறவே, சேஸ் சென்னை அணியின் கையை விட்டு சென்றது. டெல்லி அணி வைட் யார்க்கர்களாக போட்டு சென்னை அணியை திணறடித்துக் கொண்டு இருந்த நிலையில், துபே அவுட் ஆனதும் களம் இறங்கிய தோனி நாலா பக்கமும் டெல்லி பந்து வீச்சாளர்களின் பந்துகளை சிதற விட ஸ்டேடியம் குதூகலமானது.

இறுதி ஓவரில் டெல்லி அணியின் நட்சத்திர பந்து வீச்சாளராக அறியப்படும் நார்ட்ஜே பந்து வீசிய போது, களத்தில் இருந்த மகேந்திரசிங் தோனி, அந்த ஓவரில் இரண்டு சிக்சர்கள், இரண்டு போர்களை பறக்க விட்டு, இன்னும் அவர் அதே கபாலி தான் என ரசிகர்கள் முன் நிரூபித்த அந்த தருணம், சென்னை ரசிகர்களின் தோல்வியையே மறக்க வைத்து அவரை கொண்டாட வைத்து விட்டது.

“ 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை தோற்று இருந்தாலும் கூட, களத்தில் டெல்லி ரசிகர்களின் வெற்றி கூச்சலை விட, தோனி, சிஎஸ்கே என்ற கூச்சல் தான் விண்ணை பிளந்து கொண்டு இருந்தது “

About Author