ரசிகர்களுக்கான பரிசாகவே இந்த ஐபிஎல்லில் கலந்து கொள்கிறேன் – தோனி

ரசிகர்களுக்கான சிறந்த பரிசாகவே இந்த ஐபிஎல்லில் கலந்து கொள்ள முடிவெடுத்தேன் என சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி கூறி இருக்கிறார்.

ஐபிஎல் 2023 என்பதே எனது முடிவாக இருந்து இருக்கும், ஆனாலும் ரசிகர்களுக்கு ஒரு சிறந்த பரிசை கொடுக்க வேண்டும் என்று என் மனது யோசித்த காரணத்தால் ஐபிஎல் 2024-யிலும் களம் இறங்க முடிவெடுத்தேன். இதற்கு பின்பும் இந்த சிஎஸ்கே என்னும் பந்தம் முடியுமா என்பது எனக்கு தெரியாது, தொடர வேண்டும் எனவே விரும்புகிறேன் என தோனி நெகிழ்ச்சியாக கூறி இருக்கிறார்.

“ இது போக ரசிகர்களுக்கு பிடித்த லாங் கேர் உடன் தோனி இந்த ஐபிஎல்-லில் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது, மே பி இந்த ஐபிஎல்-லில் வின்டேஜ் தோனியை பார்க்கலாம் போல “

About Author