மீண்டும் சென்னை அணியின் கேப்டன் ஆகிறார் மகேந்திர சிங் தோனி!

Jadeja Handed Over The Captaincy To MS Dhoni

Jadeja Handed Over The Captaincy To MS Dhoni

காலச்சூழலை கருத்தில் கொண்டு தோனி அவர்கள் ஜடேஜாவிடம் தலைமைப் பொறுப்பை ஒப்படைத்த நிலையில், ஜடேஜாவோ மீண்டும் தலைமைப்பொறுப்பை தோனியிடம் ஒப்படைத்து இருக்கிறார்.

இந்த சீசனில் சென்னை, மும்பை இரு அணிகளும் பெரிதாக சொதப்பி வருகின்றன. ஜடேஜா பேட்டிங், பவிலிங், தலைமை என்று மூன்றையும் ஒரே நேரத்தில் தாக்கு பிடிக்க முடியாமல் தொடர்ந்து தவித்து வந்த நிலையில், தனக்கு கொடுத்த தலைமைப் பொறுப்பை மீண்டும் தோனி அவர்களிடமே ஒப்படைத்து இருக்கிறார்.

“ இனி தோனி அவர்களை கேப்டனாக பார்க்க முடியாதோ என்று ஏங்கிய ரசிகர்களுக்கு இது நற்செய்தி, இனி ஜடேஜாவால் சுலபமாக எந்த அழுத்தமும் இல்லாமல் விளையாட முடியும் நம்புவோம் “

About Author