ஐபிஎல்-இல் இருந்து வெளியேறிய சென்னை அணியின் சுட்டிக்குழந்தை!

Sam Curran Celebrating Russel Wicket In 15th Match Of IPL 2021

Sam Curran Celebrating Russel Wicket In 15th Match Of IPL 2021

சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் சுட்டிக்குழந்தை என அறியப்படும் சாம் கர்ரன் அவர்கள் ஐபிஎல்-இல் இருந்து வெளியேறி உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன்.

சென்னை சூப்பர் கிங்ஸ்சின் நட்சத்திர வீரராக அறியப்படும் சுட்டிக் குழந்தை ஆகிய சாம் கர்ரன் அவர்கள் பேக் பெயின் காரணமாக ஐபிஎல் மற்றும் டி20 உலக கோப்பையிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். எதுவாகினும் இது சென்னை அணிக்கும் சரி இங்கிலாந்து அணியிற்கும் சரி மிகப்பெரிய இழப்பே!

ஐபிஎல்-இன் 15 ஆவது போட்டி சென்னை அணி கொல்கத்தாவுடன் மோதியது. அதிரடியாக ஆடிய சென்னை அணி 220 ரன்கள் என்ற இமாலய இலக்கை கொல்கத்தாவிற்கு கொடுத்திருக்கும். இந்த இலக்கை எப்படி கொல்கத்தா அடித்து விட முடியும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது, அங்கு ரஸ்சல் சென்னை அணியின் பந்து வீச்சை நாலா பக்கமும் பறக்க விட்டுக் கொண்டிருப்பார்.

22 பந்துகளில் 54 ரன்கள் இதில் ஆறு சிக்ஸ்கள், மூன்று போர்கள் என்று ஆக்ரோஷம் காட்டிக்கொண்டிருந்தார் ரஸ்சல். எதை எதையோ ட்ரை பண்ணிய போது அவர் விக்கெட்டை சரிக்க முடியாது சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள் தவித்து வந்தனர். அந்த நிலையில் தான் சாம் கர்ரன் 11 ஆவது ஓவரை வீச வந்தார்.

தான் வீசிய அந்த ஓவரின் இரண்டாவது பாலிலேயே ரஸ்சலை க்ளீன் போல்டு ஆக்குவார் கர்ரன். அத்தோடு நிலைகுலைந்த ரஸ்சல், தான் அணிந்திருந்த பேடைகூட கலட்டாமல், கொல்கத்தா தோற்பதை அப்படியே கடைசி வரை உற்று நோக்கி கொண்டிருப்பார். அப்படிப்பட்ட வெற்றியை சென்னைக்கு தேடி தந்த சாம் கர்ரன் என்னும் சுட்டிக்குழந்தையை அவ்வளவு எளிதில் நம்மால் மறந்து விட முடியாது.

“ மீண்டு வா சுட்டிக்குழந்தையே, அடுத்த வருடமும் சென்னை அணியின் ஜெர்சியில் உன்னை காண ஆவலாய் இருக்கிறோம் “

About Author